2020.09.20 தினகரன் வாரமஞ்ரியுடன் வெளிவரும் இணைப்பிதழான செந்தூரம் இதழில் எனது அட்டைப் படம் தாங்கி வெளிவந்தத நேர்காணல். நன்றி - கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம் ஊவாவிலிலுந்து ஓர் உதய தாரகை - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா (ஓர் எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், சிறுவர் படைப்பாளர், சஞ்சிகை துணையாசிரியர் மற்றும் ஊடகவியலாளர்) செந்தூரம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், சிறுவர் படைப்பாளர், சஞ்சிகை துணையாசிரியர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி, தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள். 01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்? வெண்மேகப் பஞ்சுகளாக மேகங்கள் சூழ்ந்த, சுட்டெரிக்காத இதமான வெயிலோடும் சின்னச் சின்ன மழைத் தூறல்கள் தொட்டுச் செல்லும் பனிபடர்ந்த மலைகளுக்கு மத்தியில் அமைந்த ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள தியத்தலாவை எனது ஊராகும். எனவே எனது ஊரின் நாமத்தை எனது பெயரோடு இணைத்து தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா என்ற பெயரில் எழுதி வருகின்றேன...
Comments
Post a Comment